கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைபள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம்!



அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள் வழங்கும் பணி ஜூன் 21 முதல் துவங்கியது.தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டு இம்மாதம் துவங்கியது. கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

'ஆன்லைன்' மற்றும் கல்வி, 'டிவி' வகுப்புகளை துவக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய கல்வியாண்டுக்கு, 292 கோடி ரூபாய் செலவில், பாட புத்தகங்களை இலவசமாக வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார்.அதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகம் வழங்கும் பணி துவங்கியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 4 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரில் வந்து, புத்தகங்களை பெற்றுச் செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கு செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments