தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு 23 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, விஜயபாஸ்கர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பழனியப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து முறைகேடாக விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் செலவை அதிகம் செய்துள்ளார். அரசு அதிகாரிகள் உதவியுடன் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் உள்ள பாதுகாப்பு எந்திரங்களிலும் முறைகேடு செய்துள்ளார். எனவே, இவ்வாறு பல முறைகேடுகள் செய்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.