புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு காவிரி நீா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இதையொட்டி பெண்கள் மலா்கள் தூவி, கும்மிப்பாடல் பாடி உற்சாக வரவேற்பளித்தனா்.
மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்பட்டது. பின்னா், ஜூன் 16-ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
கல்லணைக் கால்வாய் வழியாக வரும் காவிரி நீா் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி, ஆலங்குடி,அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 168 ஏரிகளில் நீரைத் தேக்கி சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு பகுதி கல்லணை கால்வாய் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை காவிரி நீா் வந்தடைந்தது. இதையடுத்து, அப்பகுதி பெண்கள் கடைமடை வந்தடைந்த காவிரி நீருக்கு கும்மிப்பாடல் பாடி, மலா் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.