ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் உமாதேவி தலைமையிலும், துணைத்தலைவர் பிரியா குப்பு ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன், குமார வேலன் முன்னிலையிலும் நடந்தது.
கூட்டத்தில் அமரடக்கி ஒன்றியக்குழு தி.மு.க. உறுப்பினர் சரண் சிவசங்கர் பேசுகையில், கூட்ட அரங்கில் எடப்பாடி பழனிசாமி படத்தை எடுத்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டும் என்றார். இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுந்தரி கூத்தையா எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி படத்தை எடுக்கக்கூடாது என்றார். இதனால், கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை தலைவர் சமாதானப்படுத்தினார். பின்னர் உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து பேசினர்.
ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.