தமிழகத்தில் கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தொற்று குறைவான மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடை, இறைச்சிக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சலூன் கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட சில கடைகளை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டையின் பகுதியான கீழ ராஜவீதியல் பல்வேறு ஜவுளி கடைகளில் முன்கதவு பூட்டப்பட்ட நிலையில் மறைமுகமாக மாற்று வழியில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, நகரமைப்பு ஆய்வாளர் ஜெய்சங்கர், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் கீழ ராஜ வீதிக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் கூட்டமாக சென்ற மக்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.
பின்னர் அங்கு மறைமுகமாக செயல்பட்ட ஜவுளிக் கடைகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பெரிய ஜவுளி கடைகளின் உள்ளே சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் கூடியிருந்தனர். அதனைத்தொடர்ந்து கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு கடையை மூடி பூட்டினர். பின்னர், ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைகள் உள்பட 8 கடைகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மறு உத்தரவு வரும்வரை கடையை திறந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால், கீழ ராஜவீதி பரபரப்பாக காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.