திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள களமாவூர் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் சாலையின் இருபுறமும் அடைக்கப்பட்டு இருந்தன.
இதன் காரணமாக மேம்பாலம் அருகே செல்லும் மாற்றுப்பாதை வழியாக 2 கிலோ மீட்டர் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தன. அந்தப் பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சாலையின் இருபுறமும் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது.
இதனால், அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் சாரை, சாரையாக செல்லத் தொடங்கின. இந்த மேம்பாலம் திடீரென திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது மாற்றுப் பாதையை செப்பனிட ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்தப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தரப்பில் கேட்டபோது, ரெயில்வே மேம்பாலத்தை நாங்கள் திறக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் சாலையை அடைக்கச் சொன்னால் மீண்டும் அடைத்து விடுவோம் எனக் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.