நுண்ணீர் பாசன முறையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக அளவுப்பரப்பில் சாகுபடி செய்ய இயலும். இதனால் நீர் விரயமாவது குறைவதோடு பயிருக்கு தேவையான நீர் நேரடியாக பயிரின் வேர்ப்பகுதிக்கு செல்வதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து அதிக விளைச்சல் கொடுப்பதோடு களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பயறுவகை பயிர்களுக்கு தெளிப்பு அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீர் பாசனக்கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனக் கருவிகளும் நிறுவலாம். நடப்பு ஆண்டில் புதுக்கோட்டை வட்டாரத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் 350 எக்டேர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசன கருவிகள் நிறுவ சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை சான்று, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான சான்று போன்ற ஆவணங்களை கொடுத்து நுண்ணீர் பாசன கருவிகளை அமைத்து பயனடையுமாறு புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.