ஊட்டியாக மாறிய கோபாலப்பட்டிணம்!!





கோபாலப்பட்டிணத்தில் இன்று ஓரு நாள் முழுவதும் குளு குளு கிளைமேடாக காணப்பட்டது.

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வட மாவட்டங்கள் ,கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெப்பம் பதிவான நிலையில் இன்று 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை சூரியன் உதித்தாலும் சூரியனின் வெப்பம் வெளி வராமல்  அருமையான கிளைமேட் நிலவியது. வெயில் வராமல் குளிர்ச்சியாக இருந்து காலை முதல் இரவு வரை வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.

கோபாலப்பட்டிணத்தில் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெயிலுக்கு பிறகு கோபாலப்பட்டிணத்தை வாட்டி வதைத்த கடும் வெயிலுக்கு மத்தியில், இந்த தொடர் குளு குளு  வானிலை கோபாலப்பட்டிணம் மக்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. 

கோபாலப்பட்டிணத்தில் வெப்பக் காற்றில் இருந்து மீண்டு ஊட்டி போல குளு குளுவென காட்சியளித்து.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments