புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான “பெண்கள் உதவி மையம்” உதவி தொலைபேசி எண் அறிமுக நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பெண்கள் உதவி மைய தொலைபேசி எண்களான 181, 112 ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். காணொலியில் கூடுதல் டி.ஜி.பி. (சீருடை பணியாளர் தேர்வாணையம்) சீமா அகர்வால், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக டி.ஜ.ஜி. ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 போலீஸ் நிலையங்களில் இருந்து கலந்துகொண்ட 40 பெண் போலீசாருக்கு உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டது. உளவியல் நிபுணர் கார்த்திக் தேவநாயகம், குழந்தைகள் நல குழுமம் ஸ்டெல்லா புஷ்பராணி, நிர்மலா ராணி, மகளிர் திட்ட அதிகாரி ரேவதி, குழந்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ரேணுகா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பு நடத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.