TNTJ புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தெருக்கூத்து(சர்க்கஸ்) நடத்தும் 50 குடும்பங்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் விநியோகம்






TNTJ  புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தெருக்கூத்து(சர்க்கஸ்) நடத்தும் 50 குடும்பங்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள உணவு பொருட்கள் விநியோகம் செய்ப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் 50 குடும்பங்களுக்கும் அதிகமான தெருக்கூத்து சர்க்கஸ் நடத்தும் மக்கள் வசித்து வருகின்றார்கள். கொரோனா பேரிடர் காரணமாக மாநில அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் இந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து ஒருவேளை உணவிற்குக் கூட மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள்.

உணவின்றி தவிக்கும் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் TNTJ அன்னவாசல் கிளை நிர்வாகிகள் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் நிலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.

அதனடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 13/06/21 சனிக்கிழமையன்று அங்கிருந்த 50 குடும்பங்களுக்கு ரூ.1,000/- வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை நேரில் சென்று அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பிறர் நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்கிற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்றொடருக்கு ஏற்ப..,
பசியால் வாடிய மக்களின் துயர் தீர்க்க தங்களால் இயன்ற சிறு உதவியை அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு அந்த மக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

என்றும் மக்கள் பணியில்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments