மீமிசல், கோபாலப்பட்டிணம் பகுதி மக்களுக்கு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக கபசூரக் குடிநீர் விநியோகம்!



மீமிசல் கடைவீதி பகுதி மற்றும் கோபாலப்பட்டிணம் பகுதி மக்களுக்கு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ஐந்தாவது முறையாக   கபசூரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5-வது நாளாக நேற்று (11/06/2021) மீமிசல் கடைவீதி மற்றும் கோபாலப்பட்டினம் பகுதி மக்களுக்கு இலவசமாக கபசூரக் குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டது.

இதில் 250 பேர் பயன் அடைந்தனர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் அப்துல் ரசாக், துணை செயலாளர் முகமது முனாஸ் மற்றும் மருத்துவரணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரோனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள். மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.




என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments