அறந்தாங்கி ஆலங்குடி பேராவூரணி தொகுதிகளை உள்ளடக்கி அறந்தாங்கி வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆகிய மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கிய அறந்தாங்கி வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் இந்த நிலையில் அறந்தாங்கி மாவட்டம் உருவாக்கும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அறந்தாங்கியில் ஐடியல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
கூட்டத்தில் அறந்தாங்கி ஆலங்குடி பேராவூரணி தொகுதிகளை உள்ளடக்கிய அறந்தாங்கி மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுப்பது அறந்தாங்கி மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடத்துவது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வர்த்தகர்களை அணுகி அறந்தாங்கி மாவட்டம் தொடங்க ஆதரவு கேட்பது மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வர்த்தகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து அறந்தாங்கி மாவட்டம் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்பது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அறந்தாங்கி ஆலங்குடி பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஊராட்சி செயலர்கள் முன்னாள் நகர சபை கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அறந்தாங்கி மாவட்டம் உருவாக்கும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.