கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கஜா புயலில் மா, பலா, தேக்கு, தென்னை, வேம்பு, சந்தனம், புளி, புங்கன், ஆலமரங்கள் என லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த நிலையில் தான் மரங்கள் சாய்ந்த நிலங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர் விவசாயிகள். புயலில் வீழ்ந்த மரங்களை விட அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் ஏரி, குளங்களின் கரைகள், சாலை ஓரங்கள் என பொது இடங்களில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
இதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள அஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து வளர்ந்துள்ள நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் குறுங்காடு அமைக்க திட்டமிட்டனர். இதையறிந்த ஒரு தன்னார்வ அமைப்பு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியது. ஆயிரம் மரக்கன்றுகளையும் இளைஞர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களே நட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், எங்கள் பள்ளி நிர்வாகி குருகுலம் சிவநேசன் வழிகாட்டுதலில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவிட்டோம். இப்போது மீண்டும் ஆயிரம் பழமரக்கன்றுகள் உள்பட பல வகையான மரக்கன்றுகளை குறுங்காடாக அமைத்திருக்கிறோம். நாங்கள் நட்ட மரக்கன்றுகளை நாங்களே தண்ணீர் ஊற்றி மரங்களாக வளர்த்துவிடுவோம் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.