புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்களது தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் முந்தைய வகுப்பில் 40 சதவிகிதத்துக்கும் குறையாமல் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
மேலும் வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் பாா்வைத் திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளின் தேசிய அடையாள அட்டை நகல், அவா்களது வாசிப்பாளா்களின் விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை. கடைசி நாள் ஜூலை 31. மேலும் விவரங்களுக்கு 04322 - 223678.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.