புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான முறையில் ஜமாத் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரியவர்கள் ஐந்து நபர்கள் மற்றும் இளைஞர்கள் 5 பேர் என்று 10 பேர் கொண்ட குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது. இவர்களின் பணியானது புதிய நபர்களை கொண்டு புதிய நிர்வாகத்தை தேர்வு செய்ய கோபாலப்பட்டிணத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் திறமையான நபர்களை கண்டறிந்து 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு நடைபெறும் கூட்டத்தில் அறிமுகம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று 16.07.2021 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ-விற்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு தலைமை கொண்ட ஜமாஅத் நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் அல்வின்னர் வர்த்தக சங்கம் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.
இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.
அதில் நிர்வாகிகள் பின்வருமாறு:
தலைவர்:
1.ASM. செய்து முஹம்மது
2.OSM. முஹம்மது அலி ஜின்னா
துணைத்தலைவர்: MKR.முஹம்மது மீராசா
செயலாளர்: M.ராஜா முஹம்மது
துணை செயலாளர்: ME.கலந்தர்
இணை செயலாளர்: VE.சாகுல் ஹமீது
பொருளாளர்: KM.முகமது உசேன்
கணக்காளர்: மு.மு.சர்புதீன்
நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள்:
1.J.இக்பால் 2.K.சவுக்கத் அலி 3.சித்திக் ரகுமான் 4.M.சித்திக் 5.N.அக்பர் 6.R.M.A.இஸ்சதீன் 7.M.ரகுமான் 8.S.அப்பாஸ் 9.S.சாகுல் 10.A.சாதிக் (மங்களம்) 11.அ.மு.நஸார் 12.SMY.யூசுப் 13.OS.யாசின் 14.M.S ஷேக்
கோபாலப்பட்டிணம் வரலாற்றில் இரட்டை தலைமை கொண்டு ஜமாஅத் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.