புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் மற்றும் தனி தாசில்தார்களை மாற்றி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவிரி-வைகை குண்டாறு தனி தாசில்தார் செந்தில்குமார் புதுக்கோட்டை தாசில்தாரராகவும், அறந்தாங்கி தாசில்தார் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரவீனா மேரி திருமயம் தாசில்தாரராகவும், குளத்தூர் தனி தாசில்தார் செந்தில்நாயகி ஆலங்குடி தாசில்தாரராகவும் மாற்றப்பட்டனர்.
புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்ட தனி தாசில்தார் முத்துக்கருப்பன் இலுப்பூர் தாசில்தாரராகவும், புதுக்கோட்டை அகதிகல் நலம் மாவட்ட கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் சரவணன் விராலிமலை தாசில்தாரராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மணமேல்குடி தனி தாசில்தார் காமராஜ், அறந்தாங்கி தாசில்தாரராகவும், அறந்தாங்கி தனி தாசில்தார் வெள்ளைச்சாமி ஆவுடையார்கோவில் தாசில்தாராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ராஜா மணமேல்குடி தாசில்தாரராகவும் மற்றப்பட்டுள்ளனர். மேலும் 18 தனி தாசில்தார்கள் உள்பட மொத்தம் 26 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.