நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதுவும் கொரோனாவுக்குப்பின் இந்த அவலம் மேலும் அதிகரித்து இருக்கிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்காளத்தில் பிணவறை உதவியாளர் பணியிடங்களுக்கு என்ஜினீயர்கள், முதுநிலை பட்டதாரிகள், பட்டதாரிகள் என உயர்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்து இருக்கும் பரிதாப நிலை நிகழ்ந்துள்ளது.
தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பிணவறை தடயவியல் பரிசோதனைக்கூடத்தில் 6 உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.ஆனால் இந்த பணிக்கு 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் சுமார் 100 பேர் என்ஜினீயர்கள், 500 முதுநிலை பட்டதாரிகள், 2,200 பட்டதாரிகள் ஆவர்.
பிணங்களை கையாளும் பணிக்கு உயர்ந்த கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பித்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அவர்கள், 84 பெண்கள் உள்பட 784 பேருக்கு மட்டுமே எழுத்து தேர்வுக்கான கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே இந்த பணியில் இருப்போரின் குடும்பத்தினர் மட்டுமே வழக்கமாக இந்த பணிக்கு விண்ணப்பிப்பார்கள் எனக்கூறியுள்ள அவர்கள், ஆனால் முதல் முறையாக அதிக கல்வித்தகுதி கொண்ட ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் இது வேலையில்லா திண்டாட்டத்தின் அவலத்தை காட்டுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.