தொண்டி அருகே மீன் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் சம்பை அருகே உள்ள வேம்பாரில் இருந்து தொண்டி வழியாக கட்டுமாவடி செல்ல இருந்த மீன் ஏற்றிவந்த சிறிய கண்டெய்னர் வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த வாகனத்தில் பயணம் செய்த சாயல்குடி குதிரைமொழியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் அந்தோணிராஜ் (வயது 20) சம்பவ இடத்திலேயே பலியானர்.
தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப்பதிவு செய்து உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வாகனத்தை சாயல்குடியைச் சேர்ந்த பெரியசாமி மகன் உலகு துரை (24) ஓட்டி வந்துள்ளார்.
நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதால் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் வாகனம் கவிழ்ந்து, கண்டெய்னர் தனியாக வாகனம் தனியாக தூக்கிவீசப்பட்டது. இதில் இருந்த மீன்கள் சாலை ஓரம் சிதறிக்கிடந்தன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.