மக்கள் கொடுக்கும் புகார் மனுவின்அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி பணிகளை மேற்கொள்ள செய்கிறார் எம்எல்ஏ முத்துராஜா.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, தனது தொகுதியில் மக்கள் நலப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறார். மக்கள் கொடுக்கும் புகார் மனுவின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி பணிகளை மேற்கொள்ள செய்கிறார்.
அவ்வகையில், புதுக்கோட்டை நகர்ப்புற பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து நிவர்த்தி செய்வதற்காக, எம்எல்ஏ முத்துராஜா, தனது சொந்த முயற்சியில் முத்துக்குமார் (9597693317), பால்ராஜ் (8760313860) ஆகிய பணியாளர்களை நியமித்துள்ளார். அவர்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்புகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூறி உள்ளார்.
பூங்கா நகர் 1ம் வீதி பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் அதை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சார்லஸ் நகர் 2ம் வீதியில் குடிநீர் குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலைய சிறு நீர் கழிப்பிடம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சரி செய்யப்பட்டன.
காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ வை.முத்துராஜா, அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் செடிகொடிகள் முளைத்தும் குப்பைகள் தேங்கி கிடந்ததையும் கவனித்தார். உடனடியாக மைதானத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நகராட்சி பணியாளர்கள் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.