வாலிபரின் கண் அருகே இருந்த இரும்பு துகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி புதுக்கோட்டை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கும்முப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது36). இவர் தனக்கு நீண்ட நாளாக தலைவலி உள்ளதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் மாதம் காது, மூக்கு, தொண்டை பிரிவில் சிகிச்சை பெற வேண்டி புற நோயாளியாக வந்தார்.
காது, மூக்கு தொண்டை பரிசோதனையில் எந்தவித நோயும் இருப்பதாக அறிகுறிகள் இல்லை. எனவே சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் வலது கண்ணும், மூக்கும் சேரும் இடத்தில் இரும்பு துகள் இருந்தது தெரியவந்தது. பின்பு தனக்கு மலேசியாவில் வேலை பார்க்கும் போது 2017-ம் ஆண்டில் கியர்பாக்ஸ் தெரித்து சில இரும்பு துகள்கள் வலது கண்ணின் வெளிபாகத்தில் புதைந்தது என்றும், அதற்கு அங்கேயே சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.
ஆனால் அப்போது சி.டி.ஸ்கேன் எடுக்கவில்லை எனவும் மருத்துவர்களிடம் கூறினார். பின்னர் ஒரு வருட காலமாக தலைவலியுடன் மலேசியாவில் சிகிச்சை பெற்றதாகவும், பின்பு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊர் வந்ததாகவும், மேலும் தலைவலிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனை வந்ததாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து முருகேசனுக்கு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப்பிரிவில் டாக்டர் ராஜா கணேஷ் தலைமையில் டாக்டர்கள் ஆறுமுகம், அருணகிரி, ராயப்பன்குமார் அடங்கிய அறுவை சிகிச்சை குழு, டாக்டர்கள் செந்தில்குமார், கணேசன், மதிநிறைசெல்வி அடங்கிய மயக்குனர் குழு முழு மயக்கம் கொடுத்து மூக்கு வழியாக எண்டோஸ்கோப்பி மூலம் கண்ணுக்குள் உள்ள கொழுப்பில் புதைந்திருந்த இரும்பு துகளை நவீன சிகிச்சை கருவிகள் மூலம் பார்வைக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் 4 மணி நேரம் போராடி துல்லியமாக எடுத்தனர். ஒரு வாரத்திற்கு பிறகு கண் பரிசோதனை செய்யப்பட்டதில் பார்வை நன்றாக இருந்தது. தலைவலியும் குணமாகியது. இதற்கு முருகேசன் மருத்துவக் குழுவிற்கும், மருத்துவமனைக்கும், தமிழக அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
இது குறித்து மருத்துமனை முதல்வர் பூவதி கூறுகையில், ``இத்தகைய அரிய அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவாகும். இதை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலுமாக இலவசமாக செய்யப்பட்டுள்ளது'' என்றார். இந்த அரிய அறுவை சிகிச்சையை செய்த டாக்டர்கள் குழுவை முதல்வர் பூவதி பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.