ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
மும்பையை சேர்ந்த இவர் ரேய்ட்டர்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனத்தில் மூத்த புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் பாதுகாப்பு படையினருடன் சென்று தலீபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் மறைவுக்கு அமெரிக்கா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான மோதலை புகைப்படம் எடுத்தபோது ரேய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக் கொல்லப்பட்டார் என்பதை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். சித்திக்கின் மரணம் ரேய்ட்டர்ஸ் மற்றும் அவரது ஊடக சகாக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ஆப்கானிஸ்தானில் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றோம்” என கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.