கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் காட்டுக்குளம்-மீமிசல் சாலை! ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!



கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் வழியாக மீமிசல் செல்லும் சாலையில் கடந்த பத்து நாட்களாக தெருவிளக்கு எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காட்டுகுளம் பகுதியில் கடந்த பத்து நாட்களாக அங்குள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை என கூறப்படுகிறது. மேலும் ஏராளமானோர் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்வோர் இருட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதி இருட்டாக இருப்பதால் பாம்புகள் மற்றும் பூச்சிகள் அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எரியாத மின் விளக்குகளை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக காட்டுக்குளம் பகுதியில் எரியாத மின் விளக்குகள் சரி செய்து கொடுத்து கோபாலப்பட்டிணம் மக்களின் நலனை காக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments