அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி அப்துல்கலாம் வேடம் அணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணை வழங்குதல் மற்றும் மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் லீமாரோஸ்லிண்ட் தலைமை தாங்கினார். மாணவர்கள் சேர்க்கையை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் தொடங்கி வைத்தார். மேலும் இந்த பள்ளி தலைமை ஆசிரியர், அப்துல்கலாம் வேடம் அணிந்து ஆசிரியர்களுடன் வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினார்.
மேலும் அரசு பள்ளியில் வழங்கப்படும் கல்வி மற்றும் விலையில்லா பொருட்கள் குறித்து எடுத்து கூறினார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் சசிக்குமார், ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.