கோபாலப்பட்டிணத்தில் குரங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. குழந்தைகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் குரங்கு நடமாட்டம் உள்ளது. அவுலியா நகர் பகுதியில் அதிகமாக நடமாட்டம் காணப்படுகிறது. எனவே வெளியில் செல்லக்கூடியவர்கள் எச்சரிக்கையாக செல்லும்படியும், பிள்ளைகளை தேவையின்றி வெளியில் அனுப்பாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொள்கின்றோம். குரங்கு சில வீடுகளில் உள்ள மரத்தில் பழங்களை தின்று வீசுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கோபாலப்பட்டிணத்தில் 4 பேரை வெறி நாய் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது. தற்போது விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியமாக உள்ளது.
குரங்குகளை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சையில், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பிறந்து 8 நாட்களே ஆன இரட்டை குழந்தைகளை குரங்குகள் தூக்கிச்சென்றன. இதில் ஒரு குழந்தையை அருகில் உள்ள அகழியில் வீசியதால் அந்த குழந்தை இறந்தது. மற்றொரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![]() |
அவுலியா நகர் பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம் |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.