இதனை கண்டு வேதனை அடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த மரம் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் வெட்டப்படும் மரங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு தெற்கு 4-ம் வீதியில் உள்ள மருத்துவமனை அருகே வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோன்று நேற்று தெற்கு 2-ம் வீதியில் வெட்டப்பட்ட மரங்களுக்கும் பால் ஊற்றி, மலர்மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதில், மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், செயலாளர் பழனியப்பா கண்ணன், இணைச் செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் மரங்களால் தான் மனிதர்களுக்கு இயற்கையான காற்று கிடைக்கிறது. சமீப காலமாக காற்று கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். செயற்கை காற்று மூலம் பலர் உயிர் பிழைத்தனர். ஆகவே, மரங்களை வெட்டக்கூடாது என்பது எங்களது உருக்கமான வேண்டுகோள்.
பனைமரத்திற்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என்பது போல மற்ற மரங்களுக்கும் அதே கட்டுப்பாடுகளை விதிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.