அறந்தாங்கியில் மணல் குவாரி அமைக்கக்கோரி தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆறு உள்ளிட்ட இடங்களில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மணலுக்கு மாற்று ஏற்பாடாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மணலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், அறந்தாங்கி ஒன்றியத்தில் மணல் குவாரி அமைக்கக்கோரி நேற்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விஜயபுரம், மங்கள்நாடு, கொடிவயல், குறிஞ்சாங்கோட்டை, சுப்ரமணியபுரம், ராஜேந்திரபுரம், மாத்தூர், பாலகிருஷ்ணாபுரம், ஆயிங்குடி, மாத்தூர், அரசர்குளம், கொன்னக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் அமரசிம்மேந்திரபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறபட்டு அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.
பின்னர், கோட்டாட்சியர் சொர்ணராஜிடம் மனு கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் ஏ.ஐ.டி.யூ.சி, மணல் மாட்டு வண்டி, கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் ஒரு சேர மாட்டு வண்டிகள் அணிவகுத்து சென்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.