புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவைப்பட்டால் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு
கழுவுதல், முக கவசம் அணிதல் போன்றவற்றை எடுத்துரைக்கும் விதமாக நகராட்சி சார்பில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கொரோனா ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை தனது செல்போனில் படம் பிடித்தபடி மாவட்ட ஆட்சியர் கண்டு ரசித்தார்.
தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை பறக்கவிட்டார். தொடர்ந்து நகராட்சி பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செல்பி எடுத்துக்கொண்டார்.
தேவைப்பட்டால் மினி ஊரடங்கு
நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கூறினார்.
கொரோனா தொடர்பான விளையாட்டு போட்டிகள், குறும்பட போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவைப்பட்டால் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் விதிமுறைகளை மீறும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி பொறியாளர், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.