ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புதுக்கோட்டை மாவட்டம் வட்டார வளமையம் ஆவுடையார்கோவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கணக்கெடுப்பு கணக்கெடுப்பு பணியில் தொடக்கமாக முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரையின்படி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஆவுடையார்கோவில் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பள்ளி அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி சார்ந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கணக்கெடுப்பு பணியானது பள்ளி மற்றும் அதன் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆவுடையார் கோவில் மகா சாமி நகர் பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் பொழுது கண்டறியப்பட்ட மாணவர்களை ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு பணியின்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு கருப்பையா மற்றும் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு மணிமாறன் மற்றும் புள்ளியியல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வட்டார கல்வி அலுவலர் லதா பேபி வட்டார வளமைய மேற்பார்வையாளர்( பொ) அனிதா ஆசிரியர் பயிற்றுனர்கள் ஸ்ரீதேவி முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.