பொன்னமராவதி பேரூராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட் கார்டு என்னும் ஸ்மார்ட் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி சார்பாக வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பொன்னமராவதி பேரூராட்சியின் செயல் அலுவலர் தனுஷ்கோடி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தினமும் வீடுகளில் குப்பைகளை வாங்கும் தூய்மை பணியாளர்கள், தாங்கள் வைத்திருக்கும் இயந்திரத்தின் மூலம் வீட்டின் உரிமையாளர் கொடுக்கும் ஸ்மார்ட் கார்டு பதிவு எண்ணை பதிவு செய்வது மேலை நாடுகளுக்கு இணையாக உள்ளது.
வீட்டின் உரிமையாளர் ஒரு வார காலமாக குப்பைகளை கொடுக்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு பேரூராட்சி சார்பில் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
வீட்டின் உரிமையாளர்கள் வெளியூருக்கு சென்று இருந்தாலும் மேற்பார்வையாளர்கள் அவர்களின் விவரங்களை அறிந்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு
ஸ்மார்ட் கார்டு மூலம் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு எவ்வளவு குப்பைகளை கொடுத்திருக்கிறார்கள் என்பதை எளிதாக அறிய முடியும் என்றும் குப்பைகளை முறையாக கொடுக்காதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் தாங்கள் குப்பைகளை வழங்கவில்லை என செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
இதனால் வீட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதை எளிதாக தடுக்க முடியும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தூய்மையான நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தத் திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் இந்த திட்டம் தங்களுக்கு நல்ல பயன்பாடாக உள்ளதாகவும், எந்த சிரமமும் இன்றி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.