கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை செல்ல கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருவரும் கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க பையை தேடினர். ஆனால் பையை காணவில்லை. அதில் இருந்த பணம், மருந்து சீட்டும் தொலைந்து போனது. இதனால் நகரம் சன்னதி ரோட்டில் இறங்கி அவர்கள் அழுதுகொண்டு நின்றுள்ளனர். பின்னர் கீரமங்கலம் பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து அங்கு நின்றவர்களிடம் பர்சை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்கிடையே அறந்தாங்கியிலிருந்து திரும்பி வந்த அதே பஸ் டிரைவர் ஜெயராஜிடம் சென்று தொலைந்து போன பையை குறித்து அவர்கள் கேட்டனர். அப்போது கண்டக்டர் சாந்தார் அந்த பையில் என்ன இருந்தது என்று கேட்டபோது ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் மருந்து சீட்டு இருந்ததாக கூறினர். அவர்கள் சொன்னது சரியாக இருந்ததால் பையை அவர்களிடம் ஒப்படைத்தார். பையை பெற்றுக்கொண்ட தாயும், மகளும் கண்ணீரோடு நன்றி கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.