அறந்தாங்கி டூ பட்டுக்கோட்டை அரசு பஸ்சில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்




கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை செல்ல கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருவரும் கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க பையை தேடினர். ஆனால் பையை காணவில்லை. அதில் இருந்த பணம், மருந்து சீட்டும் தொலைந்து போனது. இதனால் நகரம் சன்னதி ரோட்டில் இறங்கி அவர்கள் அழுதுகொண்டு நின்றுள்ளனர். பின்னர் கீரமங்கலம் பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து அங்கு நின்றவர்களிடம் பர்சை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்கிடையே அறந்தாங்கியிலிருந்து திரும்பி வந்த அதே பஸ் டிரைவர் ஜெயராஜிடம் சென்று தொலைந்து போன பையை குறித்து அவர்கள் கேட்டனர். அப்போது கண்டக்டர் சாந்தார் அந்த பையில் என்ன இருந்தது என்று கேட்டபோது ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் மருந்து சீட்டு இருந்ததாக கூறினர். அவர்கள் சொன்னது சரியாக இருந்ததால் பையை அவர்களிடம் ஒப்படைத்தார். பையை பெற்றுக்கொண்ட தாயும், மகளும் கண்ணீரோடு நன்றி கூறினர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments