புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). விவசாயி. இவர் தற்போது குடும்பத்துடன் கோட்டைப்பட்டினம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு பின்னர் கோட்டைப்பட்டினம் திரும்பி வந்து கொண்டிருந்தார். கோட்டைப்பட்டினம் பாலம் அருகே வந்தபோது இவருக்கு எதிரே கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், காளிமுத்து ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காளிமுத்து மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலத்தில் உள்ள குழிகளை மூட வேண்டும்
இந்த விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பாலத்தில் இரண்டு குழிகள் உள்ளன. இதனால் வாகனம் ஓட்டி வருபவர்கள் இந்த குழிக்குள் விட்டு விடுவதால் கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது வரை இந்த பாலத்தில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளது. ஆகையால் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தில் உள்ள குழிகளை சரி செய்தால், இந்த விபத்து விபத்தினை தடுக்கலாம் என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.