ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைன் கல்வி இன்றியமையாததாகி விட்ட சூழலில் ஆன்லைன் விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்போனில் எவற்றை பார்க்கின்றனர்.எவ்வளவு நேரம் பார்க்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் செயலிகளை கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த பிள்ளைகளை அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள், சமூகத் தளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்யவிடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால் உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினிகளை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.