புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் (வார்டு எண் 9) , ஒன்றியக் குழு உறுப்பினர் (வார்டு எண் 5), 5 ஊராட்சி மன்றத் தலைவர், 41 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 48 பதவிகளுக்கு 117 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 32 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன.
பொன்னமராவதி அருகே கீழத்தானியம் ஊராட்சி மன்றத் தலைவராக த.நல்லையா மற்றும் மாவட்டத்தில் 33 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 7 பேரும், திருமயம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சி வேட்பாளர்கள் 3 பேரும் போட்டியிடுகின்றனர். மேலும், 4 ஊராட்சி மன்றத் தலைவர், 8 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 14 பதவிகளுக்கு 47 பேர் போட்டியிடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பதவிக்கு கூட்டணிக் கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் போட்டியிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.