புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு புதுக்குடி கிராமத்தில் இருந்து நேற்று நாட்டுப்படகு மூலம் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அருகில் சிலர் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தெற்கு புதுக்குடி மீனவர்கள் அவர்கள் அருகே சென்று பார்த்தபோது அவர்கள் வெடிவைத்து மீன் பிடித்தது தெரியவந்தது. இதனைடுத்து அவர்களை பிடித்து தங்களது படகில் ஏற்றிக்கொண்டு அவர்கள் படகையும் கயிறு மூலம் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து மீன்வளத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் செல்வேந்திரன், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெடிவைத்து மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுகுடியை சேர்ந்த வேலு (வயது 32), செந்தில்குமார் (35) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் வெடிவைத்து பிடித்த மீன்களை மீன்வளத் துறையினர் கைப்பற்றி அப்பகுதியில் ஏலம் விட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.