கோபாலப்பட்டிணம் மக்களின் நீண்ட நாள் கனவு நினைவாகியது கோபாலப்பட்டிணத்தில் ஹமீதியா ஆண்கள் அரபி மதரஸா ஆரம்பம்




கோபாலப்பட்டிணம் மக்களின் நீண்ட நாள் கனவு நினைவாகியது
கோபாலப்பட்டிணத்தில் ஹமீதியா ஆண்கள் அரபி மதரஸா ஆரம்பம்
 
நமது கோபாலப்பட்டிணத்தில்  இன்று 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை 
ஃபஜ்ர் தொழுகை முடிந்து ஜமாத் நிர்வாகிள்& இமாம்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் நமது பெரியபள்ளிவாசலில் ஹமீதியா ஆண்கள் அரபிமதரஸா  துவங்கப்பட்டுள்ளது.




இதில் குர்ஆன் மனனம் செய்யக்கூடிய ஹிஃப்ழு பிரிவு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நமது ஊர் பிள்ளைகள் இதில் மாணவர்களாக சேர்ந்துள்ளனர்.
பள்ளிக்கூடம் செல்பவர்களும் மதரஸாவில் ஓதி குர்ஆன் மனனம் செய்வவதற்குண்டான பாடத்திட்டமும் உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து
கொள்கின்றோம்.

மதரஸாவில் சேர தகுதி:
30ஜுஸ்வு குர்ஆனை பார்த்து ஓதத்தெரிந்தாலே போதுமானது.

தற்போது மதரஸா பெரியபள்ளிவாசல் மாடியில் செயல்படுகின்றது.  இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் ஆண்கள் அரபி மதரஸாவிற்கென்று புதிய கட்டிடம் கட்டப்படும்.

கோபாலப்பட்டிணத்தில் தற்சமயம் இளைஞர்கள் வழி தவறி சென்று கொண்டிருக்கின்றார்கள்.அவர்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல இந்த மதரஸா மிகப்பெரும் துணையாக இருக்கும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மதரஸாவிற்கு அனுப்பிவைத்து குறைந்தபட்சம் ஒரு வீட்டுக்கு ஒரு ஹாபிழ் ஆலிம் உருவாக முன்வரவேண்டும்.

இந்த ஆண்கள் அரபி மதரஸாவை நமது ஊரில் துவங்க உறுதுனையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ஜமாஅத் நிர்வாக பெருமக்கள், இமாம்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த ஹமீதியா அரபி மதரஸா உலக அழிவு வரை நமது ஊரில் சிறப்பாக நடைபெற வல்லநாயன் அருள்புரிவானாக ஆமீன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments