இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பண்டியன் (வயது 49). இவர், ஒரு மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் இருந்து கோவிந்தநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயமடைந்தவர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தேவபாஸ்கரன், உதவியாளர் பூபதிராஜா ஆகியோர் காயமடைந்த பண்டியனை மீட்டபோது அந்த இடத்தில் ரூ.30 ஆயிரம் பணம், செல்போன், ஆதார், ரேஷன்அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கீழே கிடந்துள்ளன.
இதனையடுத்து பாண்டியனை ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். பின்னர் அவரது செல்போனில் இருந்து பாண்டியனின் உறவினர்களை வரவழைத்து பணம் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர். சரியான நேரத்தில் பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த தேவபாஸ்கரன், பூபதிராஜாவை பொதுமக்கள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.