இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான சின்னம் (Logo with Tag Line) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி செல்லும் நேரத்துக்குப் பின்னர் வசிப்பிடத்திற்கு அருகில் சிறு,சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்தத் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கான லோகோ மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லோகோ (logo with tag line) உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ''அனைத்து பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்கலாம் வயது வரம்பு இல்லை.
போட்டியாளர்கள் தங்களின் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்டோபர் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் லோகோ ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும்.
சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிதில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூ.25,000 பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.