மூன்று தினங்கள் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் 6ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புத்தாடைகள் வாங்கியும் பட்டாசுகள் ஆர்டர் கொடுத்தும் மக்கள் மகிழ்ந்து வருகின்றனர்
இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் தடையின்றி கிடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ரேஷன் கடைகள் கூடுதல் நேரம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 8 முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து வைத்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும், எடையாளர்கள் பற்றாக்குறை இருந்தால் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உட்பட தன்னார்வலர்களை நியமித்து, பொதுவிநியோக திட்ட பணிகள் துரிதமாகவும் சீராகவும் நடைபெற வழிவகை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பு ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படுவதால், 6ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஏழாம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் நியாயவிலை கடைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.