தொழில்நுட்பம் வளரும்போது அதற்கேற்ப மோசடி பேர்வழிகளும் தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் செல்போன்கள் மூலம் ஆன்லைனில் திருடுவோர் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர்கிரைம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கியில் இருந்து பேசுவது போல ஆதார் கார்டு, பான்கார்டு எண்ணை பெற்று அதன் மூலம் வங்கிக்கணக்கில் பணத்தை திருடுவது போன்ற மோசடிகளை அரங்கேற்றி வந்த ஆன்லைன் மோசடி நபர்கள், இப்போது எஸ்.எம்.எஸ். மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்பி வங்கிக்கணக்கு விவரங்களை பெற்று பணத்தை மோசடி செய்து வருவதாக சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது. இதிலிருந்து தப்ப சில அறிவுறுத்தல்களையும் காவல்துறை வழங்கியுள்ளது.
* வங்கிக்கணக்கு பிளாக் செய்யப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யக்கூடாது.
* மொபைல் எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும் என்று குறுஞ்செய்தி வந்தால் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யக்கூடாது
* ஆன்லைனில் வரும் பகுதிநேர வேலை போன்ற லிங்க்கையும் கிளிக் செய்யக்கூடாது.
* பரிசு பார்சல் வந்திருக்கிறது என்று கூறி பணம் அனுப்பும்படி கூறினாலோ, வேலை கிடைக்க முன்பணம் செலுத்தக் கூறினாலோ, வெளிநாடுகளில் தொழில் செய்து பணம் பெறலாம் என்றோ வரும் அழைப்புகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
* இணையதளங்களிலோ பேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ வெளிநாட்டவர் என்று கூறி பழகும் நபர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேட்ரிமோனியல் தளங்களில் திருமணத்திற்கோ, மறுமணத்திற்கோ பதிவு செய்யும்போது வரனை நேரில் பார்க்காமல் பணம் அனுப்பக்கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.