கோபாலப்பட்டிணத்தில் பெய்த மிதமான மழை











கோபாலப்பட்டிணத்தில்  மிதமான மழை பெய்தது

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்பகுதியில் 3 கி.மீ. உயரத்துக்கு வானில் வளிமண்டல மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, புதுக்கோட்டை உட்பட
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன்மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில்
இன்று அக்டோபர் 4 திங்கட்கிழமை
பகல் 12:30 மணி அளவில் தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து பகல் 1:10 மணி அளவில்   மழை பெய்ய தொடங்கியது. கால் மணி நேரமாக மழை பெய்தது. பிறகு மழை நின்றது .

மழையின் காரணமாக சாலையோரங்களிலும், மழைநீர்  தேங்கி நின்றது. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல  குளிர் நிலவி வருகிறது.

இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments