கோபாலப்பட்டிணத்தை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம்






கோபாலப்பட்டிணத்தை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது, ஆறுதலாக இன்று
அக்டோபர் 16 சனிக்கிழமை  
தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து மதியம் 3 மணி அளவில்  லேசான மழை பெய்ய தொடங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல  குளிர் நிலவி வருகிறது.

இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்  
புகைப்படம் & வீடியோவை எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டனர்















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments