மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலை உப்பளம் R.புதுப்பட்டினம் சாலையில் உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உப்பளம் R.புதுப்பட்டினம் செல்லும் சாலையில் வாசிர் காலனி அருகில் உள்ள மின்கம்பம் (https://goo.gl/maps/PXE9GMGvjJU5ABbd9) சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து உயிர் பலி ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. வீடு மற்றும் கடைகள் அருகே உள்ள இந்த மின்கம்பம் விழுந்தால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்: திருமாறன், ஆர்.புதுப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.