புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் வைத்து கஞ்சா மொத்த வியாபாரம் செய்து வந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதாக தொடர்ந்து கஞ்சா போதை மருந்து ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
இந்நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த ஆட்டோவை நிறுத்திய காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் தொடர்ந்து ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த சண்முகம் மற்றும் விந்தியா என்பது தெரியவந்தது இருவரும் ஏற்கனவே 146 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் அவர்கள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.