கடலில் படகு கவிழ்ந்ததில் கோட்டைப்பட்டினம் மீனவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்!



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 22-ந்தேதி இரவு நாட்டு படகு மூலம் அப்பகுதியை சேர்ந்த மணிமுத்து மற்றும் கணேசன் ஆகிய இருவரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் சூறைக்காற்று வீசிய காரணத்தினால் படகு கடலில் மூழ்கியது. இதில் படகில் சென்ற கணேசனை மட்டும் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டார். மற்றொரு மீனவரான மணிமுத்துவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் மணிமுத்து கதி என்ன என்பது தெரியவில்லை. 

இந்நிலையில் 3-வது நாளாக மாயமான மணிமுத்துவை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments