கல்வி நிலைய வளாகங்களில் தொடரும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி நிலையங்களில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வினோத் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கண்டன உரையாற்றினார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகாதீர், பாரதி உள்ளிட்டோர் பேசினர்.
கறம்பக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு லக்சாயினி தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சந்தோஸ் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வைரமணி, பாலாஜி உள்ளிட்டோர் பேசினர். போராட்டங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.