இலங்கை கடற்படையின் அத்துமீறலால் நடுக்கடலில் பலியான கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிருந்தா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய கணவர் ராஜ்கிரண். அவருடன் சுகந்தன், சேவியர் என 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த மாதம் 19-ந் தேதி நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களது படகின் மீது அத்துமீறி ரோந்துக் கப்பலை மோதச்செய்துள்ளனர்.
இதில் படகு பழுதாகி நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். எனது கணவர் ராஜ்கிரண் 2 நாட்களுக்கு பின்பு பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
என்னிடம் கூட எனது கணவர் உடலை காண்பிக்காமல் அடக்கம் செய்துவிட்டனர். இதனால், அவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தில் அவரின் முகம், உடலில் காயங்கள் இருந்தன.
எனவே இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், எனது கணவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும், உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மனுதாரர் கணவர் உடலை மறுபரிசோதனை செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?” என கேள்வி எழுப்பினார். பின்னர், “அந்த மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டு இருந்தால் அதனை எளிதாக விட்டுவிட முடியாது. எனவே புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தடய அறிவியல் துறை டாக்டர் தமிழ்மணி தலைமையில் டாக்டர்கள் குழுவினர், மனுதாரரின் கணவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அந்த நிகழ்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பான அறிக்கையை வருகிற 24-ந்தேதி இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.