திருமணத்தின்போது வரதட்சணை வாங்கக் கூடாது எனவும், மாற்றம் என்பது நம்மிடம் இருந்து உருவாக வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் சார்பு நீதிபதி ராஜா, வக்கீல்கள் பாண்டிசெல்வி, பர்வீன் பானு ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள், அதில் உள்ள விவரங்கள் குறித்து பேசினர்.
இதில் ஆசிரியைகள், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் குடும்ப வன்கொடுமை, விவாகரத்து, வரதட்சணை தொடர்பான புகாரில் விசாரணை முறை, வழக்கில் உள்ள சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் பேசுகையில், திருமணத்தின்போது வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என முடிவெடுக்க வேண்டும். திருமணத்தின்போது வரதட்சணைக்கு பதிலாக பெண்களின் பெயரில் சொத்தை எழுதி வையுங்கள்.
இதேபோல மணமகன் வீட்டாரும், மணமகள் பெயரில் சொத்து எழுதி வைக்க கூறுங்கள். சமூகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் வர வேண்டும். வரதட்சணையாக பணம், பொருள் கேட்பது ஒரு குற்றமாகும் என்றார். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கையேடு புத்தகத்தை அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ராஜா பேசுகையில், கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தின நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், பள்ளியில் 4 மற்றும் 5-வது படித்து வரும் தனது 2 மகன்களுக்கு திருமணத்தின் போது கட்டாயமாக வரதட்சணை வாங்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்தார். மாற்றம் என்பதை தன்னிடம் அவர் விதைத்துக் கொண்டார். அவருடைய தன்னம்பிக்கை, முயற்சிக்கு தலை வணங்குகிறோம் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.