ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை புதுகை மகிளா கோர்ட்டு தீர்ப்பு!



சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமியை வழிமறித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தீர்ப்பை தொடர்ந்து அஜித்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments