இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாள்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது
கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாள்களாக மழை மேகங்கள் சூழ்ந்து அவ்வப்போது சாரல் மழை,பலத்த மழை, கன மழையுமாக பெய்து வந்தது. இதனால் இப்பகுதிகளில் உள்ள , குளம், உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கோபாலப்பட்டிணத்தில் சில பகுதிகளில் சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
இந்நிலையில் இன்று 11 நவம்பர் வியாழக்கிழமை கோபாலப்பட்டிணத்தில் காலை வானத்தை சூழ்ந்திருந்த மழை மேகங்கள் விலகி வெயில் அடித்தது.
காலையிலேயே வெயில் சுல்லென அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழையைப் பார்த்து வந்த மக்களுக்கு இந்த வெயிலைப் பார்த்தது உற்சாகமாய் இருந்தது. இன்னும் சில நாள்களுக்கு இவ்வாறு தொடர்ந்து வெயில் அடித்தால் சேறும் சகதியுமாக உள்ள சாலைகள் காய்ந்து போக்குவரத்திற்கு தடை இல்லாத நிலை ஏற்படும்.
மேலும் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வெளியேறிவிடும். வீடுகளில் மக்கள் துணிமணிகளை உலர வைப்பதற்கு இந்த வெயில் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.