ஆவுடையார்கோவில் கடைவீதியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் சேவுகப் பெருமாள், விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எழுநூற்றிமங்கலம், வீரமங்கலம், கிடங்கிவயல் மற்றும் பொன்பேத்தி ஆகிய வட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 2020-21-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்காததை கண்டித்தும்,
கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக் கடைகளில் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், போன்ற உரங்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் அல்லல் படுவதை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படுகின்ற சம்பளம் தனித்தனியாக சாதி வாரியாக ஊராட்சிகளின் சார்பில் கூலி ஏற்றப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செங்கோடன், விவசாய தொழிலாளர் சங்கமாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெபமாலை பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.